சென்னையில் பெண்ணிடம் சண்டை போட்டுக் கொண்டே ஸ்டியரிங்கை கூட பிடிக்காமல் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநரால் பயணிகள் அச்சம் அடைந்தனர். ஓஎம்ஆர் சாலை சிறுசேரி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில், பெண் ஒருவரை ஓட்டுநர் ஒருமையில் பேசியதாகக் கூறி வாக்குவாதம் ஏற்பட்ட போது, பொதுமக்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் ஓட்டுநர் நடந்து கொண்ட விதம், பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியது.