தொடர்ந்து 3 மாநகராட்சி கூட்டங்களில் பங்கேற்காததால் காரைக்குடி திமுக மேயர் முத்துதுரை தனது மேயர் பதவியை இழந்தார். தொடர்ந்து 3 மாமன்ற கூட்டங்களில் மேயர் பங்கேற்காவிட்டால் பதவியை இழக்க நேரிடும் என நகர்ப்புற உள்ளாட்சி சட்ட விதிகள் தெரிவிக்கின்றன. முத்து துரையின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், துணை மேயர் குணசேகரன் பொறுப்பு மேயராக 3 கூட்டங்களை நடத்தினார். 36 கவுன்சிலர்களை கொண்ட காரைக்குடி மாநகராட்சியில் திமுகவுக்கு 20 கவுன்சிலர்கள் உள்ளபோதும், முத்து துரையின் பதவி இழப்புத் தீர்மானம் மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
Back to Top News
Top
August 31, 2026 at 12:53 PM
காரைக்குடி திமுக மேயர் முத்துதுரை மேயர் பதவியை இழந்தார்..
Polimer News