மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. குடமுழுக்கு விழாவைக் காண்பதற்காக இரவு முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் திரண்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. 50 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து குடமுழுக்கு விழாவையொட்டி பக்தர்களுக்காக 50 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை உணவாக கேசரி, இட்லி, வடை, வெண்பொங்கல் உள்ளிட்ட உணவுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மதிய உணவாக கேசரி, தக்காளி சாதம், தயிர் சாதம், 2 வகை காய்கறி கூட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புனித நீர் தெளிக்கக்கோரி பக்தர்கள் வாக்குவாதம் மீனாட்சி அம்மன் கோயிலின் மேற்கு கோபுர வாசல் பகுதியில் புனித நீர் தெளிக்கக்கோரி பக்தர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வாளிகளில் புனித நீரை எடுத்து வந்த போலீசார் பக்தர்கள் மீது தெளித்தனர். தடுப்புகளை தகர்த்து முன்னேற முயற்சி குடமுழுக்கு விழாவைக் காண்பதற்காக பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்த நிலையில், கோயில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தகர்த்துவிட்டு முன்னேற சிலர் முயன்றனர். இதனைத் தடுக்க முயன்ற போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அதிகாலையில் கூட்ட நெரிசலில் பக்தர்கள் காயம் குடமுழுக்கு விழாவைக் காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் காத்திருந்தனர். அதிகாலையில் தடுப்புகளை அகற்றிவிட்டு முன்னேறிய போது கூட்டமாக சரிந்து விழுந்ததில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
Back to Top News
Top
September 17, 2026 at 4:59 AM
மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி விழாக்கோலம் பூண்ட மதுரை மாநகர்... 50,000 பேருக்கு அறுசுவை விருந்து..
Polimer News