தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதேநேரத்தில், டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழைக் காலங்களில் டெங்கு பாதிப்பு ஏற்படுவது இயல்பு ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலங்களில் தட்பவெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் டெங்கு பாதிப்புகள் ஏற்படுவது இயல்பானது என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டெங்கு பரவலை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாதிப்பு நிலவரத்தை கண்காணித்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 16 ஆயிரத்தை நெருங்கிய டெங்கு பாதிப்பு தமிழகத்தில் நடப்பாண்டில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தல் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் வகையில், பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.