சீனாவில் நீர் நிலைகள் மற்றும் கடலில் மூழ்கியவர்களை மீட்கும் வகையில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் பறக்கும் ரோபோ சாதனம் ஒன்றை இயக்கி மீட்புக் குழுவினர் ஒத்திகை நடத்தினர். கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள சியாங்ஹு கடற்பகுதியில் ஒத்திகை நடத்திக் காட்டப்பட்டது. "உயிர் வளையம்" என்று அழைக்கப்படும் பறக்கும் ரோபோ சாதனம் , நீரில் தத்தளிக்கும் நபரின் அருகே சென்று மிதக்கத் தொடங்கியதும் பாதிக்கப்பட்டவர் அதனை பிடித்துக்கொண்டு தப்பிக்கும் ஒத்திகை கவனத்தை ஈர்த்தது. மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்டவரை மீட்டபிறகு பறக்கும் ரோபோ மீண்டும் புறப்பட்டு பறந்து செல்கிறது.
Back to Top News
Top
August 17, 2026 at 10:55 AM
நீர் நிலைகள் மற்றும் கடலில் மூழ்கியவர்களை மீட்கும் "பறக்கும் ரோபோ" சாதனம்..!
Polimer News