கள்ளக்குறிச்சியில் 69 உயிர்களை பலிவாங்கிய கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் இறுதி விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெற்றோர் உயிரிழந்ததால் ஆதரவற்றவர்களான குழந்தைகளுக்கு அரசு விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் இடமளித்து படிப்பை தொடரவும், மேற்படிப்புக்கு கல்விக் கடன் வழங்கவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். உயிரிழந்த நபர்களின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்களுக்கு வேலை வாய்ப்பை அரசு உறுதி செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார். கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தவர்களுக்கு சிறு தொழில் தொடங்குவதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
Back to Top News
Top
September 9, 2026 at 6:01 AM
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் அவசியம் - நீதிபதி
Polimer News