சீனாவின் சிசாங் தன்னாட்சிப் பிராந்தியத்தில் உள்ள தாஷில்ஹுன்போ புத்த மடாலயத்தில், செமோகின்மு சாம் ((Semoqinmu Cham)) என்ற நடனச் சடங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆடிய துறவிகள், சீனாவின் வளர்ச்சி, செழிப்பு மற்றும் மழைக்காக பிரார்த்தனை செய்தனர். இந்த விழாவில் பல்வேறு விலங்குகள் மற்றும் புராண உருவ முகமூடிகளை அணிந்து கொண்டு நடனக் கலைஞர்கள் நடனமாடினர்.