சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் 3 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்புக்கு, அடகு வைக்கப்பட்ட அசல் தங்க நகைகளுக்குப் பதிலாக போலி நகைகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. கிளை மேலாளராகப் பொறுப்பேற்ற கணேஷ் சந்திர பண்டா, வாடிக்கையாளர் ஒருவர் அடகு வைத்த நகை பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்து காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தியபோது 24 நகைக் கடன் கணக்குகளில் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பான புகாரில், பாதுகாப்புப் பெட்டக சாவிகளை பராமரிக்கும் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Back to Top News
Top
September 15, 2026 at 8:24 AM
பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் ரூ.3.15 கோடி நகை மோசடி..!
Polimer News