கொலம்பியாவில் திங்கள் கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது. பெரீரா என்ற நகரில் மட்டும் 101 பேர் உயிரிழந்தனர். அங்கு ஆயிரக் கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டாகியுள்ளன. பலர் இடிபாடிகளில் சிக்கியுள்ளதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.மோப்ப நாய் உதவியுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதிபர் அபெலார்டோ டி லா எஸ்பிரில்லா (Abelardo de la Espriella), நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பெரீரா (Pereira) தவிர, குவிப்டோ (Quibdo), காலி (Cali) போன்ற நகரங்களிலும் பெரும் சேதங்களும், அதிக உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆறு விமான நிலையங்களில் உள்ள கட்டுமானங்கள், 18 தேசிய நெடுஞ்சாலைகள் பெரிதும் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.