கோவையில், ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ஒரு கோடியே 6 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்துவிட்டு காரில் தப்பிய 4 பேர் கொண்ட கும்பலை, உளுந்தூர்பேட்டை போலீசார் கைது செய்து, கோவை போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள உறவினரின் நகைக் கடையில் தங்க நகைகள் வாங்கவந்த தொழிலதிபரிடம் பணம் வழிப்பறி செய்யப்பட்டது. இந்த நிலையில், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், வேகமாக வந்த கோவை பதிவெண் கொண்ட காரை மடக்கி, அதில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, தொழிலதிபரிடம் வழிப்பறி செய்தது அவர்கள்தான் எனத் தெரியவந்தது. வழிப்பறி செய்யப்பட்ட பணமும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டது.
Back to Top News
Top
September 6, 2026 at 6:04 AM
ஆந்திர தொழிலதிபரிடம் ரூ.1.06 கோடி வழிப்பறி செய்த கும்பல் கைது..!
Polimer News