இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களின் நலனை உறுதி செய்யவும், மீனவர்களையும், படகுகளையும் விரைவாக விடுவிக்கவும், இலங்கை தரப்புடன் அனைத்து நிலைகளிலும் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர் இன்பதுரை எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். 2014-ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை மத்திய அரசின் முயற்சிகளால், 3,862 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பியுள்ளதாகவும், இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் உள்பட அனைத்து இந்திய மீனவர்களின் பாதுகாப்பும், தூதரகம் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Back to Top News
Top
September 6, 2026 at 6:55 AM
"இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை"..
Polimer News