நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்படும் சட்டவிரோத சாய ஆலைகள் மீது கடும் நடவடிக்கை தொடரும் என பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்தார். குமாரபாளையத்தில் நடைபெற்ற தவெக அரசின் நூறு நாள் சாதனை விளக்கக் கூட்டத்தில் பேசிய அவர், மூத்த அரசியல்வாதிகள் பலரும் லட்டு லட்டு பேசிக் கொண்டு இருப்பதாகவும், அவர்கள் பதவியில் இருந்தபோது அதிக லட்டுகள் சாப்பிட்டு அதே நினைப்பில் இருப்பதாகவும், ஆனால் தங்களுக்கு லட்டு வேண்டாம், தாங்கள் நேர்மையாகச் செயல்படுவோம் என்று, லஞ்சத்தை சுட்டிக்காட்டி பேசினார்.