இடைத்தேர்தலில் பா.ம.க போட்டியிடாத நிலையில் யாருக்கு ஆதரவு என்ற தங்களது நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க நீடிக்கிறதா? செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் அன்புமணி மவுனம். சென்னை கிண்டியில் பேட்டியளித்த அவர், முதலமைச்சர் லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட நிறுவனம் சென்னையில் 30 ஆண்டு காலமாக தொழில் செய்வதாகவும், அந்த ஒப்பந்தத்தை இங்கேயே மேற்கொண்டிருக்கலாம் என்றும் விமர்சித்தார். மேலும், புதிய தலைமை செயலகம் அவசியமானது என்றாலும், குறுகிய இடமாக பட்டினப்பாக்கத்தில் அதனை கட்டினால் போக்குவரத்து நெரிசல் உள்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என அன்புமணி கூறினார். சென்னைக்கு வெளியே ஆயிரம் ஏக்கரில் தலைமைச் செயலகம், முதலமைச்சர், அமைச்சர்கள் வீடுகளைக் கொண்ட நிர்வாக நகரத்தை கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.