ங்கப்பூரில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்குச் சரிந்தது. இந்தோனேசியா காடுகளில் ஏற்பட்டுள்ள தீயால் சிங்கப்பூர் முழுவதும் அடர்த்தியாக புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. இதனால், நகரின் பல பகுதிகளில் உள்ள அடையாளச் சின்னங்கள், உயரமான கட்டடங்கள் போன்றவற்றை தெளிவாகப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் காற்றின் தரக்குறியீடு 190 என்ற ஆரோக்கியமற்ற அளவுக்கும், சில இடங்களில் 200 என்ற அளவைக் கடந்து மிகவும் ஆரோக்கியமற்ற அளவுக்கும் பதிவாகியுள்ளன. ((இந்தோனேசியாவில், கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, சூப்பர் எல்-நினோ வானிலை மாற்றங்களால் போர்னியோ மற்றும் சுமத்ரா தீவுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் சிங்கப்பூரில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது.))