சட்டப்பேரவையில் பழைய கதைகளையும், 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான, தற்போது சட்டரீதியாக பயன்படுத்த முடியாது என கூறப்படும் கமிஷன் அறிக்கைகளையும் உலகத்தின் உண்மை போல் முதலமைச்சர் விஜய் பேசியதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர், முதலமைச்சர் பொறுப்புடன் செயல்பட்டு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.