சென்னையை அடுத்த பொத்தேரி பகுதியில் தனியார் தங்கும் விடுதிகள், மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில், போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். உதவி ஆணையர் தலைமையில் 5 காவல் ஆய்வாளர்கள், 10 உதவி ஆய்வாளர்கள் உள்பட 95-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 6 மாணவர்களிடம் 53 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கு போதைப்பொருள் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.