சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கிவைத்த மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்தை மீனவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மீன்பிடித் தடை காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்களின் எட்டு படகுகளை ஆந்திர கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்து கடந்த ஒரு மாதமாக வைத்துள்ளதாக அவர்கள் வாக்குவாதம் செய்தனர். முற்றுகையிட்ட மீனவர்களை சமாதானம் செய்த அமைச்சர் ஸ்ரீநாத், பிரச்சனைக்கு தீர்வுகாண்பதாகக் கூறி புறப்பட்டு சென்றார். இதனால் ஆவேசம் அடைந்த மீனவர் ஒருவர், மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்யபோவதாக மிரட்டல் விடுத்ததால் போலீசார் தலையிட்டனர்.
Back to Top News
Top
July 16, 2026 at 6:14 AM
மருத்துவ முகாம் தொடங்கிவைத்த அமைச்சர் ஸ்ரீநாத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்..!
Polimer News