சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த முதிய தம்பதி நள்ளிரவில் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டனர். ராமப்பகொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன்அமராவதி தம்பதியினர், தென்னை மட்டை பின்னும் தொழில் செய்து வந்தனர். நேற்று இரவு இவர்களுக்கு சாப்பாடு கொடுக்க வந்த பேரன் நவநீதன், இருவரும் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து தீவட்டிபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். மூதாட்டியின் காதில் இருந்த தோடு, மூக்குத்தி இல்லாமல் இருந்ததால் நகைக்காக இந்தக் கொலை நடந்ததா என்ற கோணத்தில் டி.ஐ.ஜி சந்தோஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Back to Top News
Top
July 21, 2026 at 5:40 AM
காடையாம்பட்டி அருகே முதிய தம்பதி நள்ளிரவில் கொடூரமாக தாக்கி கொலை..!
Polimer News