சென்னை அருகே எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையிலான பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ' எனப்படும் நீர்வழிப் போக்குவரத்தை ஏற்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்,அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்காக மெட்ரோ நிறுவனம் டெண்டர் கோரியது .