மதுரை விரகனூர் அரசு உயர்நிலை பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தவர் தான் அந்த சண்டியர் மாணவர். தன்னுடன் படிக்கின்ற மாணவி ஒருவரிடம் தன்னுடைய ஹீரோயிசத்தை காண்பித்து பழகி உள்ளார். அந்த மாணவியும் கூட படிக்கிற பய தானே... என்று யதார்த்தமாக பழக, தன்னை ஹீரோவாக நினைத்து வலம் வந்த சண்டியர் மாணவர், அந்த மாணவியிடம் காதலை தெரிவித்துள்ளார். அவ்வளவு தான் அந்த மாணவி அலறியடித்துக் கொண்டு ஓடி விட்டாராம். இதனை பார்த்த சக மாணவர் ஒருவர் , காதல் விவகாரத்தை ஆசிரியரிடம் போட்டுக் கொடுத்துள்ளார். ஆசிரியர்கள் அழைத்து விசாரிக்க அந்த மாணவி நடந்த விவரத்தை சொல்லி , அந்த பையன் கட்டாயப்படுத்துறான் என்று கதறி அழுதுள்ளார். இதையடுத்து பள்ளிக்கூடம் முடிந்ததும் அந்த மாணவியை மடக்கிய அந்த சண்டியர் மாணவர் தாக்கியதாக கூறப்படுகின்றது. மறு நாள் அந்த மாணவி பெற்றோருடன் வந்து பள்ளியில் புகார் தெரிவித்துள்ளார் . இதற்கு பின்னர் நடந்தது தான் வீடியோவில் நாம் பார்க்கின்ற காட்சிகள், எதற்காக அந்த மாணவியை தாக்கினாய் ? என்று ஆசிரியர்கள் கேட்க, யாருக்கும் கட்டுப்பட மறுத்து வெட்டுப்புலி போல ஆபாசமாக பேசி அட்ராசிட்டி செய்துள்ளது அந்த சண்டியர் பாய். தன்னுடைய காதல் விவகாரத்தை ஆசிரியர்களிடம் தெரிவித்த மாணவனை, ஆசிரியர்கள் கண் முன்னே சரமாரியாக தாக்கியதாக தெரிவித்தனர் ஆசிரியர்கள் இந்த வீடியோ வைரலான நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி நேரடியாக பள்ளிக்கூடத்துக்கே சென்று விசாரணை நடத்தினார். மாணவருக்கு கவுன்சிலிங்கும் வழங்கி உள்ளனர். 2 மணி நேர கவுன்சிலிங்கிற்கு பின்னரும் தன்னை மாற்றிக் கொள்ள மறுத்து அதிகாரிகளிடம் , அந்த மாணவர் உக்கிரம் காட்டியதாக கூறப்படுகின்றது. அந்த பள்ளியில் படிக்கின்ற மற்ற மாணவர்களின் நலன் கருதி , அந்த மாணவருக்கு டிசியை கையில் கொடுத்து பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். படிக்கின்ற காலத்தில் அதில் கவனம் செலுத்தாமல், சினிமாவை பார்த்து அதில் வருவது போல கெத்து காட்ட நினைத்தால் படிப்பு பாழ்பட்டு போய்விடும் என்பதற்கு இந்த மாணவரே நிகழ்கால சான்று.
Back to Top News
Top
August 13, 2026 at 5:22 AM
மாணவியை கண்டு காண்டான 10th boy.. TC கிழிஞ்சிருச்சாம்..! அட்ராசிட்டி செய்வோர் கவனத்திற்கு..
Polimer News