ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் இயந்திரம் உடைத்து 7 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஏடிஎம் இயந்திரம் பழுதான காரணத்தால், அதனை மூடி வைத்திருந்த நிலையில், வங்கியின் மண்டல மேலாளர் ஸ்ரீனிவாசன் நேற்று இரவு திடீரென ஆய்வு மேற்கொண்ட போது கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.