சென்னை கோட்டூர்புரம் பகுதியில் நாய் கடித்து சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்த நபர் 45 நாட்கள் கழித்து உயிரிழந்துள்ளார். டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்த முருகன் நாய் கடித்த பிறகும் சிகிச்சைக்கு செல்லாமல் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு திடீரென அவரது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், நாயின் செய்கை போல் செய்து பின் வாயில் நுரை தள்ளிய நிலையில், மருத்துவமனைக்கு அவரை உறவினர்கள் கொண்டு சென்றபோது பாதி வழியிலேயே உயிரிழந்துள்ளார்.