கன்னியாகுமரி மாவட்டம் குதிரைப்பந்திவிளையில், கொத்தனார் ஒருவர் தன்னைத் தாக்கியவர்களின் பெயர்களை எழுதி வைத்துவிட்டுக் தற்கொலை செய்துகொண்ட நிலையில், போலீசார் கடிதத்தை மறைத்து எதிர்த்தரப்பை காப்பாற்ற முயற்சிப்பதாக அவரது மாற்றுத்திறனாளி மனைவி குற்றம்சாட்டியுள்ளார். உயிரிழந்த அருள்ராஜ் என்பவர் தனது வீட்டை விற்க முயன்றபோது, வழித்தடப் பிரச்சனையால் சிலர் அதற்குத் தடையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் கடந்த 3ஆம் தேதி தன்னை வீடு புகுந்து தாக்கியதாகக் கடிதத்திலும் தரையிலும் எழுதி வைத்துவிட்டு அருள்ராஜ் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆனால் குடும்பப் பிரச்சனையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தன்னிடம் போலீசார் எழுதி வாங்கிக் கொண்டதாகவும் சிசிடிவி பதிவுகளை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் அருள்ராஜின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார். (( இதுகுறித்து இரணியல் போலீசாரிடம் கேட்டபோது, விசாரணைக்காகவே சிசிடிவி பதிவுகளை எடுத்துச் சென்றதாகத் தெரிவித்தனர் ))
Back to Top News
Top
August 25, 2026 at 9:36 AM
தன்னை சிலர் தாக்கியதாக எழுதி வைத்துவிட்டு கொத்தனார் தற்கொலை.
Polimer News