கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே பவானி ஆற்றில் சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் மற்றும் சிறுமியின் தலை மற்றும் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சீரக்கடவு பகுதியில், பவானி ஆற்றில் சாக்கு மூட்டைகள் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் புதூர் போலீசார், சாக்கு பைகளை கைபற்றி சோதனையிட்டனர். அதில் 30 வயது மதிக்கதக்க பெண் மற்றும் 5 வயது சிறுமியின் துண்டிக்கப்பட்ட தலைகளும், மற்றொரு சாக்கில் சிறுமியின் உடலும் இருந்தது. மற்றொரு சாக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் அழுகிய நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் அங்குள்ள பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் அல்ல எனவும் வேறு எங்கோ கொலை செய்து மூட்டை கட்டி பவானி ஆற்றில் வீசப்பட்டிருப்பதாக தெரிவித்த போலீசார்கொலையாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்