பேருந்து பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் மாற்று வழிகளில் போக்குவரத்து துறையில் வருவாயை பெருக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையின் போது, இவ்வாறு முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாயிரம் குளிர்சாதன பேருந்துகளை உடனடியாக வாங்க வேண்டும் என சமீபத்தில் அறிவுறுத்தியிருந்த முதலமைச்சர், அதன்படி குளிர்சாதன பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தாலும் பயணிகள் கட்டணைத்தை எக்காரணத்தை கொண்டும் உயர்த்த கூடாது என தெரிவித்துள்ளதாகவும், பயணிகள் டிக்கெட் பின்பகுதியில் தனியார் விளம்பரங்களை அச்சிடுவதன் மூலமும், பேருந்துகளில் விளம்பரங்களை வெளியிடுவதன் மூலமும் வருவாயை ஈட்ட வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.