செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இல்லாமல் இனி எந்த தொழிலும் நடைபெறாது, எனவே மாணவர்கள் ஏஐ குறித்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை மதுரவாயலில் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், தன்னை சார்ந்தோரையும் முன்னேற்றி அழைத்து செல்லும் தலைமைத்துவத்தை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஸ்ரீ பெரும்புதூர், ஒரகடம் பகுதி இன்று வாகன உற்பத்தி, செல்போன் உற்பத்தியில் முன்னிலையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.