டெல்லி பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் 2ஆம் நாள் கூட்டம். தலைவர்களுடன் குழுப்புகைப்படம் எடுத்த பிரதமர் மோடி. டெல்லி பாரத் மண்டபத்தில் திரண்ட உலகத் தலைவர்கள். பல்வேறு கலாச்சாரங்களை இந்த கூட்டம் ஒருங்கிணைத்துள்ளது. உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பால் பிரிக்ஸ் அமைப்பு வலுப்படுகிறது சர்வதேச அளவில் நிலைத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும். உலகளவில் விநியோகச் சங்கிலி சீர்குலைவுகளை எதிர்கொள்ளாமல் இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு ஆயுதமாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். வேளாண்மை துறையில் ஏ.ஐ. உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் மோதல்கள் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பிரிக்ஸ் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும். இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே அறிவதற்கான அமைப்பை ஏற்படுத்த வேண்டும். தொழில்நுட்பங்கள் அனைவருக்கும் எளிதில் சென்றடைய வேண்டும் என பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் 2ஆம் நாள் கூட்டத்தில் பிரதமர் உரை