தென்காசி மாவட்டம் வேட்டைக்காரன்குளம் அருகே நெல்லை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி, அழுதகன்னி ஆற்றின் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர். காயம் அடைந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.