சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசியல் கூட்டணி மற்றும் 2029 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். வரும் செப்டம்பர் 9ஆம் தேதி பனையூரில் நடைபெற உள்ள தவெக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில், கூட்டணிக்கான பெயர் இறுதி செய்யப்படும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். மேலும், பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான விவாதம் ஏற்கனவே முடிந்துபோன ஒன்று எனக் குறிப்பிட்ட அவர், 2029ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் மாணிக்கம் தாகூர் கூறினார்.
Back to Top News
Top
September 5, 2026 at 8:49 AM
பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என்பதில் உறுதி - மாணிக்கம் தாகூர் திட்டவட்டம்
Polimer News