நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களிள் உடல்களை கண்டறிவதற்காக, 8 மாவட்டங்களைச் சேர்ந்த அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் டி.என்.ஏ. மாதிரிகள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேகரிக்கப்பட்டு வருகிறது. கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்திரை டிராவல் ஏஜென்சி மூலம் நேபாளத்திற்கு சென்ற 57 பேரில் 21 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 36 பேரின் நிலை இதுவரை என்னவென்று தெரியவில்லை. இந்த நிலையில், காணாமல் போனவர்களின் உடல்களை கண்டறிவதற்காக தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அவர்களது குடும்ப உறுப்பினர்களின் டி.என்.ஏ மாதிரி சேகரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நேபாளத்தில் மீட்கப்படும் உடல்களை, டி.என்.ஏ மாதிரிகளை வைத்து அடையாளம் காண முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பிள்ளையார்பட்டி மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பகுப்பாய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது.
Back to Top News
Top
September 5, 2026 at 9:24 AM
நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களின் உடல்களை கண்டறிவதற்காக டி.என்.ஏ மாதிரிகள் சேகரிப்பு
Polimer News