பழனி தண்டாயுதபாணி மடத்துக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தில் இருந்து எதிர்பார்த்த வருவாய் கிடைக்காத காரணத்தால் விற்கப்பட்டதாக பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், 100 கோடி ரூபாய் நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதே அதிக விலைதான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய கோவில் நிலம், தனியார் அறக்கட்டளைக்குச் சொந்தமானது எனக் குறிப்பிட்டு கடந்த மார்ச் 27-ஆம் தேதி கையெழுத்தான விற்பனைப் பத்திரம், ஜூன் 6-ஆம் தேதி பழனி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த நில மோசடி தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் 5-வது நாளாக தங்களது விசாரணையை நடத்தி வருகின்றனர். 3 பேர் கொண்ட அதிகாரிகள் குழு, பழனி சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
Back to Top News
Top
July 20, 2026 at 8:17 AM
ரூ.100 கோடி நிலத்தில் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காததால் ரூ.2 கோடிக்கு விற்பனை..!
Polimer News