கிர்கிஸ்தானில் நடைபெற்ற உலக நாடோடி விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா, ஈரான், சீனா, துருக்கி, ரஷ்யா , ஆஸ்திரேலியா என 104 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இசிக்-குல் பிராந்தியத்தின் மலைப்பகுதியில் நடத்தப்பட்ட வில் வித்தை போட்டியில் வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர். குதிரையேற்ற வில் வித்தை போட்டிகள் பார்வையாளர்களை கவர்ந்தன. மத்திய ஆசியாவின் போலோ விளையாட்டு என்று அழைக்கப்படும் குதிரையேற்ற விளையாட்டான கோக்-போருவில் வீரர்கள் போட்டியிட்டனர். இதில், குதிரை வீரர்கள் ஒரு ஆட்டு சடலம் போன்ற மாதிரியை எதிரணியின் பக்கம் வைக்கப்படும் கொப்பரையில் தூக்கிப்போட்டு புள்ளிகள் பெறுவார்கள். உடல் பலத்தை காட்டும் கயிறு இழுக்கும் போட்டியில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். நாடோடி விளையாட்டின் உச்சமாக இரையை குதிரையில் கட்டி இழுத்து செல்லும்போது பருந்து வேட்டையில் ஈடுபடும் போட்டியும் நடத்தப்பட்டது.
Back to Top News
Top
September 5, 2026 at 12:26 PM
கிர்கிஸ்தானில் நடத்தப்பட்ட 6வது உலக நாடோடி விளையாட்டுப் போட்டிகள்.
Polimer News