சேலம் ஓமலூர் அருகே கணவனை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து விட்டு, தனது 10 பவுன் நகையை பறித்துச் சென்றதாக மனைவி புகார் அளித்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக மனைவி அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். வேலகவுண்டனூர் எஸ்கே நகரை சேர்ந்த சுஜிதாஸ்ரீ தனது மகனுக்கு உடல்நலம் சரியில்லாததால் காரில் அழைத்து சென்றதாகவும் சிலர் வழிமறித்து கணவர் பூபதியை கொலை செய்துவிட்டு நகையை பறித்து சென்றதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் மற்றும் சுஜிதாஸ்ரீக்கு காயம் எதுவும் இல்லாதது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், கள்ளக்காதலனான சந்தோஷ்ராஜுடன் இணைந்து வீட்டிலேயே பூபதியை கொலை செய்துவிட்டு, சடலத்தை காரில் எடுத்து சென்று, நகை பறிப்பு நாடகமாடியது அம்பலமானது.
Back to Top News
Top
September 3, 2026 at 10:41 AM
கணவர் கொலை செய்யப்பட்டு 10 பவுன் நகையை பறித்ததாக புகார்; திடீர் திருப்பமாக நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலனுடன் கைது
Polimer News