கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் சொத்தில் பங்கு கேட்ட தங்கையை வெட்டிக் கொன்றதோடு, தடுக்க முயன்ற அவரது கணவரின் கையையும் வெட்டித் துண்டாக்கிய காந்தகுமார் என்பவரைப் போலீசார் தேடி வருகின்றனர். காட்டுவண்ணஞ்சூரைச் சேர்ந்த காந்தகுமாருக்கு தீப ஆர்த்தி உட்பட இரண்டு தங்கைகள் இருந்தனர். இவர்களது தாய் கடந்த வாரம் காலமான நிலையில், எட்டாம் நாள் துக்கம் அணுசரிக்கும் நிகழ்வின்போது பூர்வீக நிலம் தொடர்பாகப் பிரச்சனை எழுந்துள்ளது. 80 செண்ட் அளவுள்ள அந்த நிலத்தில் தீப ஆர்த்தி பங்கு கேட்கவே, ஆத்திரமடைந்த காந்தகுமார், தனது கூட்டாளிகள் ஐவருடன் சேர்ந்து அவரைக் கொலை செய்துவிட்டுத் தப்பியதாகக் கூறப்படுகிறது.
Back to Top News
Top
July 19, 2026 at 12:53 PM
சொத்தில் பங்கு கேட்ட தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன்.. தடுக்க முயன்ற தங்கை கணவரின் கையும் துண்டானது
Polimer News