அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியான "டிசி" திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான நான்கு நாட்களில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இப்படம் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் "டிசி” திரைப்படத்தை பார்த்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், டிசி ஒரு பிளாஸ்ட்; அற்புதமான திரை அனுபவம்" என குறிப்பிட்டுள்ளார். மேலும், அருண் மாதேஸ்வரனும் லோகேஷ் கனகராஜும் இணைந்து அதிரடியான ஆக்ஷன் படத்தை வழங்கியுள்ளதாகவும், படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தும் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார், அதேபோல், இசையமைப்பாளர் அனிருத்தையும் பாராட்டிய சிவகார்த்திகேயன், "நீ உனக்கென ஒரு சிம்மாசனத்தை உருவாக்கி, அதில் கம்பீரமாக ஆட்சி செய்து, உண்மையிலேயே நிகரற்றவனாக ஆகிவிட்டாய்" என தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.