தனக்கு 8 வயதாக இருந்த போது தனது தந்தையை கொலை செய்த பிரபல ரவுடியை 25 ஆண்டுகளாக காத்திருந்து மகன் பழிதீர்த்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சோலை அழகுபுரம் சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்த சப்பாணி சரவணன் என்ற ஏ++ கேட்டகிரி ரவுடி, ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக மேலமாசிவீதியைச் சேர்ந்த பாலமுருகன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். 2001ஆம் ஆண்டு புஷ்பராஜ் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் சப்பாணி சரவணனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் புஷ்பராஜின் மகன் பாலமுருகன், 25 ஆண்டுகள் காத்திருந்து தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பழிதீர்த்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
Back to Top News
Top
September 20, 2026 at 6:25 AM
தனது 8 வயதில் தந்தையை கொன்ற ரவுடியை கொலை செய்த மகன்
Polimer News