காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையின் சிமெண்ட் மேற்கூரைப் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் படுகாயமடைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 11-ஆம் வகுப்பு மாணவியை, தமிழக பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி நேரில் பார்வையிட்டார். மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்த அவர், 25 ஆயிரம் உதவித் தொகையை மாணவியின் உறவினர்களிடம் வழங்கினார்.