சென்னை எண்ணூர் கடற்கரையில் ரீல்ஸ் எடுக்க வந்த வேலம்மாள் கல்லூரி மாணவி, ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார். வேலம்மாள் கல்லூரி மாணவர்கள் 5 பேர்,எண்ணூர் ராமகிருஷ்ணா கடற்கரையில் ரீல்ஸ் எடுப்பதற்காக குளிக்க வந்துள்ளனர். அப்போது, கடலில் 3 பேர் குளித்துக் கொண்டிருந்தபோது, ராட்சத அலையில் சிக்கி 2 பேர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். அலையில் சிக்கி மாயமான புதுச்சேரியைச் சேர்ந்த கிருத்திகா என்ற மாணவியை மீனவர்கள் மீட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், அலையில் சிக்கி மாயமான ஆவடியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற மாணவரை தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் மீனவர்கள் தேடி வருகின்றனர்.