நாரா புயல் தாக்கியதை அடுத்து கனமழை பெய்ததால் வியட்நாம் நாட்டின் வடக்கு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள், நிலச்சரிவு மற்றும் போக்குவரத்து துண்டிப்பு என பல பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய 4,300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.