தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை பற்றாக்குறையால் ஏற்படும் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க, 288 கோடியே 97 லட்சம் ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலப் பேரிடர் மீட்பு நிதியத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள இந்த நிதியை குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சித் துறை, பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறைகள் இணைந்து செலவிடும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.