சென்னை தியாகராய நகரில் உள்ள பாலன் இல்ல வளாகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகை தேவதர்ஷினி, நீட் கோச்சிங் செண்டர் விளம்பரத்தில் நடித்தவர் என்பதால் சோசியல் மீடியாவில் கடுமையாக விமர்சனத்துக்குள்ளானர். இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்ற நிகழ்வில் பங்கேற்ற நடிகை சனம் ஷெட்டி பேசும் போது இந்த போரட்டத்தில் எத்தனை பேர் காக்ரோச் பார்ட்டி மெம்பர்? எத்தனை பேர் பப்ளிக்? எத்தனை பேர் ஆர்கானிக் பப்ளிக்? நடுநிலையாளர்கள் யார்? என்று கேள்வி எழுப்பியதால் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். ஜன நாயகன் படம் பார்த்து விட்டு வந்திருக்கிறேன் என்று கூறியதால் ஜோக்கர் என்று கூறி அவரை பேசவிடாமல் தடுத்து கோஷமிட்டனர். ஆவேசமான அவர், இது ஜன நாயகமல்ல என்று எதிர்குரல் எழுப்பினார். தொடர்ந்து உரிமைக்குரல் எழுப்பிய சனம் ஷெட்டியை பேசவிடாமல் அவரது கையில் இருந்து மைக்கை பறித்துக் கொண்டு , அவரை சுற்றி நின்று கோஷம் எழுப்பினர். வெளியே வந்த சனம் ஷெட்டி , இவர்கள் மாணவர்களுக்காகவோ, ஜன நாயகத்துக்காகவோ போராடவில்லை, எந்த அஜண்டாவுக்காக போராடுகிறார்கள் என்றும் சினிமாவில் உள்ள தன்னை ஜோக்கர் என்றால் வெற்றிமாறனும் ஜோக்கர் தானே என்று கேள்வி எழுப்பினார்.
Back to Top News
Top
July 25, 2026 at 6:00 AM
வெற்றிமாறனும் ஜோக்கரா? நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்..! போராட்டத்தில் நடந்தது என்ன? இது தான் உங்க ஜன நாயகமா?
Polimer News