டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் போது காவல்துறை தனது குறைந்தபட்ச பலத்தை மட்டுமே பயன்படுத்தியதாகவும் லாத்தி என்பது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஒரு பாதுகாப்புச் சாதனமே என்றும் டெல்லி காவல்துறை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 500 முதல் 600 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள அனுமதி கேட்டுவிட்டு 30,000க்கும் மேற்பட்டோர் ஜந்தர் மந்தரில் திரண்டனர் என்றும் அனுமதியின்றி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி செல்ல முயன்றனர் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. முகத்தை அடையாளம் காணும் கேமராக்கள் ((சாதாரணப் போராட்டக்காரர்கள் அல்லது குற்றப் பின்னணி இல்லாத மாணவர்களின் விவரங்களைச் சேகரிக்கவோ, சேமிக்கவோ பயன்படுத்தப்படவில்லை என்றும்)) ஏற்கனவே குற்றப் பதிவேடுகளில் உள்ள நபர்களைக் கண்டறியவே பயன்படுத்தப்பட்டன என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அமைதியான போராட்டம் வன்முறையாக மாறி, தனியாக சிக்கிய போலீசார் மீது கும்பல் வன்முறை நடத்தப்பட்டதாகவும் அதற்குக் குறைந்தபட்ச எதிர்வினையை மட்டுமே காவல்துறை ஆற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.