சிதம்பரத்தில் திருவாசக எழுத்து ஞான வேள்வி விமரிசையாக நடைபெற்றது. உலகளவில் 22 நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் ஒரே நேரத்தில் இந்த எழுத்து வேள்வியில் பங்கேற்றதாகவும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் திருவாசகத்தின் 10 பாடல்களைத் தங்கள் கைகளால் எழுதி இந்த ஆன்மீக நிகழ்வில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆயிரத்து 500 சிவனடியார்கள், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.