சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இருந்து வேங்கைப்பட்டி வழியாக பிரான்மலைக்குப் புதிய அரசுப் பேருந்து சேவையை திருப்பத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி தொடங்கிவைத்து, மாணவர்களுடன் பேருந்தில் பயணம் செய்தார். தங்களது 20 ஆண்டுகள் கோரிக்கை நிறைவேறியதாக ஊர் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். முன்னதாக, ஊர்மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி, ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.