தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 319 பேர் கைலாஷ் யாத்திரை உள்ளிட்டவற்றிற்காக நேபாளம் சென்றுள்ளதாகவும், அதில், ஏற்கனவே மீட்கப்பட்ட 21 பேர் உட்பட, 219 பேர் பத்திரமாக இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் திங்கட்கிழமைக்குள் தமிழகம் திரும்புவார்கள் என்றும், அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் நடவடிக்கைக்காக முதலமைச்சர் உத்தரவின்படி வியாழக்கிழமையன்று 4 அமைச்சர்கள் டெல்லி சென்ற நிலையில், நேற்றிரவு அமைச்சர்கள் ராஜ்மோகன், வினோத் ஆகியோர் சென்னை திரும்பினர். பெருவெள்ளத்தில் சிக்கி மாயமானதாக கருதப்படும் 100 பேரின் நிலை குறித்த தகவல் கிடைக்கப்பெறவில்லை என்றும், அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். பேரிடருக்கு பிறகு சிக்கலான நிலபரப்பாக மாறிய சூழலிலும் மீட்பு பணிகள் தொடர்வதாக குறிப்பிட்ட அமைச்சர், யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம், நல்ல செய்தி வரும் என வேண்டுகோள் விடுத்தார்.
Back to Top News
Top
August 30, 2026 at 5:48 AM
நேபாள பெருவெள்ளம்: மாயமான 100 தமிழர்களின் நிலை என்ன? 219 பேர் பத்திரமாக உள்ளதாக என அமைச்சர் தகவல்
Polimer News