சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தெலுங்கனூரில் பெருங்கற்கால மனிதர்களின் கல்லறைகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வாழ்விடங்களை தொல்லியல் துறையினர் தேடி வருகின்றனர். இங்கு சுமார் 60 ஏக்கர் பரப்பில் கல்லறை இருப்பதால், பெரும் கற்கால மனிதர்களின் வாழ்விடங்கள் அருகில் இருக்கலாம் என்ற யூகத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கல்வட்டத்தில் இரண்டு, மூன்று எலும்பு கூடுகள் வரை உள்ளதால், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா அல்லது ஒரே நேரத்தில் உயிரிழந்தவர்களா? அல்லது போரில் இறந்து அடக்கம் செய்யப்பட்டவர்களா? என்பது முழுமையாகத் தெரியவில்லை. இங்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட வாள் அல்ட்ரா ஹைட்ரோ கார்பன் ஸ்டீலால் ஆனது என்றும் சுமார் 3,600 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Back to Top News
Top
July 20, 2026 at 12:23 PM
3000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் வாழ்விடம் குறித்த தேடல்..!
Polimer News