வடபழனியில் நடைபெறும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல்.. தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கான தேர்தலில் இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி மற்றும் சேரன் அணியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னை வடபழனியில் தேர்தல் நடைபெறும் நிலையில் வாக்களிக்க வருபவர்களை சேரன் அணியினர் அழைத்துச் செல்வதைப் பார்த்து, ஆர்.கே.செல்வமணி முறையிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினர் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது.