முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தன்னை அரைகுறை என விமர்சித்துள்ளார் எனவும், அவர்கள் செய்துள்ள முறைகேடுகளை முழுமையாக கண்டு பிடிக்காமல் இருப்பதால் அவர் கூறியது போல் அதில் தான் அரைகுறைதான் என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பதிலளித்துள்ளார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவில்களுக்கு அறங்காவலர்களை தேர்வு செய்யும் குழுவில் சினிமா தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகனை நியமித்தது ஏன் என விளக்கமளித்தார்.