வனநிலத்தை பயன்படுத்தி வரும் மலைவாழ் மக்களை மிரட்டி ரூ.1 கோடி லஞ்சம் வசூலித்ததாக புகார் - வனத்துறையினர் 6 பேர் சஸ்பென்ட் திருவண்ணாமலை ஜவ்வாதுமலை கிராமங்களில் வசித்து வரும் நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்களை மிரட்டி லஞ்சம் வசூலித்ததாக புகார் வனநிலத்தை பட்டா போட்டு தருவதாகவும் கூறி மலை வாழ் மக்களிடம் தலா ரூ.1லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வனத்துறையினர் வசூல் என புகார் ஜமுனாமரத்தூர், மேல்பட்டு, நாடானூர் வனச்சரகங்களுக்கு உட்பட்ட மலைவாழ் மக்களை மிரட்டி பணம் பறித்த புகாரில் வனத்துறையினர் 6 பேர் சஸ்பென்ட் ஜமுனாமரத்தூர் வனச்சரகர் பிரபு, மேல்பட்டு வனச்சரகர் சுரேஷ், நாடானூர் வனச்சரகர் செங்குட்டுவன் ஆகியோர் சஸ்பென்ட் வனக்காவலர் முத்து, வனவர்கள் அருணகிரி மற்றும் சுப்பிரமணியையும் சஸ்பென்ட் செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவு