அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்: கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து – முதலமைச்சர் விஜய் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சர் விஜய், தமிழக மக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீகிருஷ்ணரின் வாழ்வும் உபதேசங்களும் தர்மத்தின் பாதையில் உறுதியுடன் பயணிக்கவும், கடமையைச் செவ்வனே ஆற்றவும், அநீதிக்கு எதிராக அறத்தின் பக்கம் நின்றிடவும் நமக்கு வழிகாட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அன்பு, அறம், நேர்மை, மனிதநேயம் உள்ளிட்ட உயரிய வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றி, அனைவரும் மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் வாழும் நல்ல சமூகத்தை உருவாக்குவோம் எனவும் முதலமைச்சர் விஜய் தனது கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Back to Top News
Top
September 4, 2026 at 4:43 AM
முதலமைச்சர் விஜய் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
Polimer News